
கோலாலம்பூர், ஆக 24-
இந்திய சமூகத்தினரிடையே செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த விழிப்புணர்வு, புரிதல் மற்றும் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும் முயற்சிகளை இலக்கவியல் அமைச்சர்கோபிந்த் சிங் டியோ தொடர்ந்து கைகொடுத்து வருகிறார்.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாகும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் இந்திய சமூகமும் சமமாகப் பங்கேற்க வேண்டும் என்பதற்கு இலக்கவியல் அமைச்சு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இலக்கவியல் அமைச்சின் ஆதரவோடு தமிழ் மொழியிலான AI விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
டாமான்சாரா டாமாய் இந்திய மகளிர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பெண்கள் கலந்து பயன் பெற்றனர். இது, இலக்கவியல் அமைச்சரும், டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ, அடித்தட்டு மக்களுக்கு முன்னெடுக்கும் AI விழிப்புணர்வு முயற்சிகளின் 26-வது நிகழ்ச்சியாகும்.
இந்திய சமூகத்தில் AI குறித்த அறிவ

