

பத்து காஜா, செப் 4-
நோயினால் வலது காலை இழந்த பத்துகாஜாவைச் சேர்ந்த இளைஞர் கோமகன் முருகையா வுக்கு மனிதவள் அமைச்சர் வ சிவகுமார் இன்று 5,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்தார்.
இன்று அவரின் இல்லத்திற்கு விரைந்த அமைச்சர் சிவகுமார் உடல்நலம் நலம் விசாரித்தார்.
கடந்த மாதம் அறுவை சிகிச்சை மூலம் இவரின் இடது கால் துண்டிக்கப்பட்டது.
இவர் பத்து காஜா ஜசெக உறுப்பினர் ஆவார்.
கோமகனுக்கு
செயற்கை கால் பொறுத்துவது தொடர்பில் சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மானிடம் பேசுவேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
ஒரு சொக்சோ சந்தாதாரரான இவருக்கு கூடுதல் உதவிகள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

