சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் தீபாவளி உபசரிப்பில் வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி

சைபர் ஜெயா, டிச 8-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் புகழ்பெற்ற சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று தீபாவளி உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது

பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் மற்றும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டான்ஸ்ரீ டத்தோ பாலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஒட்டுமொத்த QS ஆசியா பல்கலைக்கழக 501-550 தரவரிசையில் தென்கிழக்கு ஆசியாவில் 81ஆவது சைபர் ஜெயா பல்கலைக்கழகம் இடத்தில் உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஏறக்குறைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சைபர்ஜெயா பல்கலைக்கழகம் உட்பட தீபாவளி நிகழ்ச்சிகளை நடத்துவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

தீபாவளி, தீபங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
இது மலேசியாவின் ஒரு கொண்டாட்டமாகும்.

தீபாவளியின் உற்சாகத்தில் நம் இல்லங்களில் விளக்கேற்றுவது போல,
நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வில் கருணை, அன்பு, இரக்கம் ஆகியவற்றால் ஒளியேற்ற வேண்டும்.

இந்த விழாவில் வசதி குறைந்த 12 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உன்னத முயற்சிக்காக சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் நற்பணிகளை பாராட்டுகிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles