

மலாக்கா, பிப் 25-
அருள்மிகு சன்னாசி மலை ஆண்டவர் கோயில் மலாக்கா
மாசி மகம் திருவிழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சன்னாசி மலை ஆண்டவரை தரிசித்தனர்.
பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் மலாக்கா மாநில ஜசெக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
மலாக்கா மாநில ஜசெக தலைவர் tey kok kiew, மாநில ஜசெக செயலாளர் அலெக்ஸ் சியா, பண்டார் ஹிலேர் சட்டமன்ற உறுப்பினர் leng Chau yen,ஸகாடேக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், காளிதாசன் உட்பட பலரும் இந்த திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

