
ரவாங் மார்ச் 24-
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு ஸெலயங் நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஸ் சூ ஏற்பாட்டில் ரவாங் Surau Ar Rahman இல் நோன்பு திறப்பு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோரும் இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. முதல் முறை தங்களது சூராவிற்கு ஒரு கவுன்சிலர் வந்திருப்பது கவுன்சிலர் எலிஸ் சூ தான் என்று சூராவின் தலைவர் மகிச்சிளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கவுன்சிலர் எலிஸ் சூ தமது சார்பில் Surau Ar Rahman நிர்வாகத்தினரிடம் ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கி உதவி புரிந்தார்.
இந்த நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்டது தமக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சிறப்பு வருகை தந்த ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

