
டில்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, ஜாபர் சாதிக்கின் நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் டெல்லியில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

