
புதுடெல்லி: “கடவுள் அனுப்பியதாக கூறும் நபர், 22 பணக்காரர்களுக்காக மட்டும் வேலை செய்கிறார். அம்பானி, அதானிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார்.
ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்தார்.
முன்னதாக, “கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்” என்று பிரதமர் மோடி பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

