மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பண உதவி!

ஷா ஆலம், ஜூன் 12: ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பண உதவியான பைக்கேர்-1000 திட்டத்திற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம் எதிர்வரும் ஜூன் 30ஆம் தேதி வரை திறந்திருக்கும்.

சிலாங்கூர் குடிமக்களுக்கான சிறப்பு திட்டத்திற்கான படிவத்தை மாநில அரசு நிர்வாக கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள சிலாங்கூர் ஊழியர் திறன் மேம்பாட்டு பிரிவின் (UPPS) அலுவலகத்தில் பெறலாம் என்று மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

“விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும், அவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாகவும் செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் உரிமம் கொண்டவராகவும், மற்றும் கடன் குறிப்பு தகவல் அமைப்பு மையத்தால் (சிசிஆர்ஐஎஸ்) தடுப்பு பட்டியலில் சேர்க்கப் படாதவராகவும் இருக்க வேண்டும்” என்று வீ. பாப்பராய்டு கூறினார்.
அனைத்து விண்ணப்பங்களும் விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல், உத்தரவாத தாரரின் (குடும்ப) அடையாள அட்டையின் நகல், வங்கி அறிக்கையின் நகல், மோட்டார் சைக்கிள் உரிமத்தின் நகல் மற்றும் சமீபத்திய சம்பளச் சீட்டு நகல் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஜூன் 30 ஆம் தேதிக்கு முன் மாநில அரசு நிர்வாக கட்டிடத்தில் உள்ள யுபிபிஎஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
மேலும் தகவலுக்கு 03-5544 7307 அல்லது 03-5544 7305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles