
கோலாலம்பூர் ஜூன் 16-
இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் வேளையில் தந்தையின் தியாகங்களை போற்றி வணங்குவோம் என்று ஜொகூர் மாநில ஜசெக ஆட்சிக் குழு உறுப்பினர் எம் கண்ணன் தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தான் கடந்து வந்த கஷ்டங்களை மறைத்து தன் பிள்ளைகளும் அந்த கஷ்டங்கள் அனுபவிக்க கூடாது என எண்ணும் அனைத்து தந்தையர்களுக்கு என் தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சியை அடைகிறேன்.
இந்த அருமையான தருணத்தில் தந்தையர்களையும் நினைவு கூர்ந்து அவர்களை வணங்குவோம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

