
புத்ரா ஜெயா, ஜூன்,19-
கிள்ளான் மாநிலத்தில் உள்ள நெங்கிரி சட்டமன்ற தொகுதி காலியாகி விட்டதாக கிளந்தான் சட்டமன்ற சபாநாயகர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
கிளாந்தான் சபாநாயகர் அனுப்பிய கடிதத்தை மலேசியா தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து வரும் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கூட்டம் முடிந்த உடனடியாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படும் என்று மலேசிய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் DATO’ NDERA IKMALRUDIN ISHAK இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

