
புத்ராஜெயா, ஜூன் 27- பிரதமர் துறையின் 2024ஆம் ஆண்டிற்கான பாராட்டுவிருந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பாகப் பணியாற்றிய மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
புத்ரா ஜெயா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் நோக்கிலும் தங்கள் சேவைகாலத்தில் நிறைவான பங்களிப்பை வழங்கிய ஓய்வு பெற்றபணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

