அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்துஜோ பைடன் விலகல்! கமலா ஹாரிஸ் புதிய அதிபர் வேட்பாளர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக, தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 5ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த தேர்தல் தொடர்பான நேரடி வாத நிகழ்ச்சியில், டொனால்டு டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஜோ பைடன் திணறினார்.

இதைத் தொடர்ந்து, அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என, அவருடைய கட்சியில் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட பலரும் அவர் விலக வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.

இவர்களின் கோரிக்கைக்கு இணங்க கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக அதிபர் தேர்தலில் இருந்து விலகி கொள்வதாக ஜோ பைடன் இன்று அறிவித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles