இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: காசாவில் இதுவரை 39,000-ஐ தாண்டியது உயிரிழப்பு!

டெல் அவில்: தெற்கு காசாவில் கிழக்கு கான் யூனிஸ் மீது இஸ்ரேலிய தாக்குதல் 39 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

அதோடு, பெரும்பாலான பாலஸ்தீனர்கள் கிழக்கு கான் யூனிஸில் இருந்து வெளியேறினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காசாவில் இதுவரையிலான பலி எண்ணிக்கை 39,000-ஐ தாண்டியுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 143 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இது முந்தைய ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 250 சதவீதம் அதிகமாகும்.

அதாவது, “பல ஆண்டுகளாக, கிழக்கு ஜெருசலேம் உட்பட வெஸ்ட் பேங்கில் வசிக்கும் குழந்தைகள் கொடூரமான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்” என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles