
கோலாலம்பூர் ஆகஸ்ட் 1: கோலா லங்காட்டில் உள்ள பண்டார் ரிம்பாயுவில் ஒப் பிந்தாஸ் மூலம் கடந்த 6 மாதங்களாக ஊதியம் பெறாமல் பணி புரிந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று வெளிநாட்டுப் பணிப்பெண்கள் காவல்துறையினரால் மீட்கப் பட்டனர் மற்றும் ஒரு பெண் முதலாளி கைது செய்யப்பட்டார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) புலம்பெயர்ந்தோர் கடத்தல் மற்றும் (Atipsom) D3 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலைமை உதவி இயக்குநர் D3 புக்கிட் அமான் SAC சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.
“30 முதல் 44 வயதுடைய இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்கள் இருவர் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் இரவு 11 மணியளவில் மாடி வீடு ஒன்றில் மீட்கப்பட்டனர்.
“பாதிக்கப்பட்டவரின் முதலாளியான 62 வயது உள்ளூர் பெண் மற்றும் 37 வயதான இந்தோனேசியப் பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.