
கோலாலம்பூர்: ஆக 2-
உரிமம் பெறாத சமூக ஊடக தளங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரித்தார்.
சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது முழுமையாக இது கட்டாயமாக்கப்படும்.
இதன் அடிப்படையில் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998, உரிமம் பெறாத தளங்களை மூடுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகளைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், பல்லூடக தொடர்பு சட்டத்தின் 126ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சேவை வழங்குநருக்கு 500,000 ரிங்கிட் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.