
வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 323ஆக உயர்ந்துள்ளது
முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 4வது நாளாக நடைபெறுகிறது.
மீட்பு படையினர் மின்னல் வேகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி வரும் வேளையில் தோண்ட தோண்ட பிணங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

