

சபா மாநிலத்தில் நேற்று தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிற்கு பெரும் ஆதரவு வழங்கப்பட்டது.
மேலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகையால் கூட்டம் அலைமோதியதோடு சபா மாநிலமும் அதிர்ந்தது.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹனிபா அமானும் இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 10 ஆவது பிரதமராக வருவதற்கு முழு ஆதரவு வழங்கினார்.
நாடு தழுவிய அளவில் பக்கத்தான் ஹரப்பானுக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வரும் வேளையில் இம்முறை சபா சரவாக்கில் பக்கத்தான் ஹரப்பான் கூடுதல் இடங்களை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

