
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – அக்டோபரில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் 2025ன் கீழ் My50 திட்டம் தொடரப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் நம்புகிறது.
இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் எடுத்துக்காட்டினார்,
குறிப்பாகக் கிள்ளான் பள்ளத்தாக்கில், மலிவு விலையில் பொதுப் போக்குவரத்து வசதியைப் பெற இத்திட்டம் பயனர்களுக்கு உதவுகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது.
“கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரிம100 மில்லியனிலிருந்து ரிம200 மில்லியனாக உயர்த்தப்பட்ட My50 திட்டம் போன்ற ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நாங்கள் கண்டுள்ளோம். அடுத்த ஆண்டும் இந்த திட்டம் தொடரும் என்று நம்புகிறேன்,” என்று லோக் கூறினார்.
My50 பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி அவர் பெருமிதம் தெரிவித்தார், இது ஒரு மாதத்திற்கு 200,000 தாண்டியுள்ளது.
“கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ரயில் சேவையை தினசரி 900,000 பயனர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் பேருந்து சேவைகளுடன் இணைந்தால், ஒவ்வொரு நாளும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் உள்ளனர்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

