சமூக சேவகர் மற்றும் தொழில் அதிபர் முகமாட் சடாட் அலி டத்தோ விருது பெற்றார் !

கோலாலம்பூர் செப்-1

தலைநகர் செலாயாங் மற்றும் ப்ரிக்பில்ட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான அலி ஃபிரேஸ் மீட் நிறுவனம் மற்றும் ஜாஸ்மின் நிறுவன குழுமத்தின் இயக்குனருமான முகமாட் சடாட் அலி பின் பட்ரூஸ் ஜாஹன் மலாக்கா ஆளுநர் துன் ஸ்ரீ செத்திய டாக்டர் ஹாஜி முகமாட் அலி பின் ருஸ்தாம் அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டத்தோ விருதை பெற்றார்.

டத்தோ அலி நாட்டில் உள்ள பல பி40 குடும்பங்களுக்கு வருடா வருடம் தீபாவளி , நோன்பு பெருநாள் சீன பெருநாள்களுக்கு தனது நிறுவனம் மற்றும் சமூக இயக்கம் வாயிலாக உதவிகளை செய்து வருகிறார்.

அதோடு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி பை ஆடை உதவி நிதிகளையும் செய்து வருகிறார்.

கோவிட் -19 காலகட்டத்தில் தனது நிறுவனத்தின் வாயிலாக பல உதவிகளை வட்டார மக்களுக்கு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பணிவான முறையில் மக்களை நாட கூடிய இவர், தன் தொழிலில் தன்னை உயர்த்திய மக்களுக்கு தான் முன்னேறிய பிறகு சில சேவைகளை செய்வதை தார்மீக கடமையாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலாக்கா ஆளுநரிடம் இருந்து டத்தோ விருது பெற்ற டத்தோ அலி -யை தமிழ் லென்ஸ் வாழ்த்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles