
பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு 8.00 மணிக்கு தாமான் டத்தோ செனுவில் மாபெரும் பிரச்சார கூட்டத்தில் களம் இறங்குகிறார்.
பத்து நாடாளுமன்ற தொகுதி பக்கத்தான் ஹரப்பானின் கோட்டை என்பதை நிரூபிப்பிக்கும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை பிரபாகரனுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

