
ஷா ஆலம், செப். 28- இந்நாட்டில் ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பங்களுக்கு போதுமான வரவேற்பு கிடைக்காமல் போனதற்கு தொழில் முனைவோர் மற்றும் தொழில் ஆர்வலர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாததே காரணமாக விளங்குகிறது.
ஹலால் சான்றிதழின் கோட்பாடு, சட்டத் தேவைகளின் அடிப்படையில் மட்டுமல்லாது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உணவுத் தரம் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது என்று ஹலால் அகாடமியின் இயக்குநர் ஹரிட்யாந்தி பென் கூறினார்.
அவர்களுக்கு (தொழில் துறையினர்) போதுமான ஹலால் விழிப்புணர்வு இல்லை. மலேசியாவில் ஹலால் சான்றிதழின் கோட்பாடு ஹலால் முழுமையானது அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார்.
பெர்னாமா

