
கோலாலம்பூர் அக் 18-
பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலையில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் 421 பில்லியன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
மலேசிய வரலாற்றில் மிக அதிக தொகை கொண்ட பட்ஜெட்டாக இது விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது 2024ஆம் ஆண்டைக் காட்டிலும், RM27.2 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.
மேலும் மலேசிய வரலாற்றில் 400 பில்லியனைத் தாண்டிய முதல் பட்ஜட் தாக்கல் இதுவாகும்.
செயல்பாட்டுச் செலவிற்கு 79.6 விழுக்காடு அதாவது RM335 பில்லியன் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், மேம்பாட்டுச் செலவினங்களுக்காக RM86 பில்லியன் ஒதுக்கப்படுகிறது.

