

பினாங்கு, ஜூன் 16-
அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வில் இந்திய மாணவர்கள் சிறந்த தேர்ச்சியை பெற்றனர்.
அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் 11A பெற்று சிறந்த மாணவராகத் திகழ்ந்த ஒருவருக்கு மடிக்கணினி (Laptop) வழங்கப்பட்டது.
மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்குகளைத் தெளிவாக நிர்ணயித்து, அதனை அடைய தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கல்வி அல்லது எதிர்கால முன்னேற்றம் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து மாணவர்களுக்கும் உயர்ந்த கல்வி மற்றும் தொழில் வெற்றிகள் கிடைக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று பினாங்கு மாநில இந்து அறநிலையத்துறை வாரியத்தின் துணை தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

