இலவச டியூஷன் திட்டம் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்!

ஷா ஆலம், செப். 16– சிலாங்கூர் மாநில அரசின் டியூஷன் ராக்யாட் சிலாங்கூர்
(பி.டி.ஆர்.எஸ்.) திட்டம் சிறப்பான வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து 10
லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் தொடக்கப் பள்ளிகளுக்கும்
இத்திட்டத்தை மாநில அரசு விரிவுபடுத்துகிறது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் 3எம் எனப்படும்
வாசித்தல், எழுதுதல், எண்ணுதல் ஆகியவற்றில் ஆற்றல் பெற முடியும்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கல்வியமைச்சு தொடக்கியுள்ள கல்வில் சீர்திருத்த பணி இலக்கின் கீழ்
மேற்கொள்ளப்படும் பாடத் திட்ட தலையீட்டு திடத்திற்கு ஏற்பவும் மாநில
அரசின் இந்த திட்டம் அமைந்துள்ளது என்று மாநில சட்டமன்றத்தில்
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது
அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles