
கோலாலம்பூர்: நவ 23-
தமது வெளிநாட்டு பயண செலவை விமர்சிப்பது பைத்தியம் பிடித்தவர்களின் செயல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
பிரதமர் என்ற முறையில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு வருகிறேன்.
இப்பயண செலவுகள் குறித்து ஒரு சில தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
உண்மையில் இந்த விவகாரத்தில் தனது அரசாங்கம் ஒரு சுத்தமான நடைமுறையை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இப்பயணத்தில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்தச் செலவை செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இது பைத்தியம் பிடித்தவர்களின் செயல். இது அவர்களின் காலக்கட்டம் என்று பிரதமர் கூறினார்.

