
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் நேற்று நாதன் மெக்ஸ்வீனி (10 ரன்), உஸ்மான் கவாஜா (8), ஸ்டீவ் சுமித், (0), கம்மின்ஸ் (3) ஆகியோரை அவுட் செய்தார். இன்று அலெக்ஸ் கேரி (21) விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீரர் என்று இலங்கை முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா பாராட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் இதை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அனைத்து வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) பும்ரா சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சில் தொடர்ந்து மெருகேறி வருகிறது.
உலகின் சிறந்த வீரராக அவர் இருக்கிறார்.
இவ்வாறு ஸ்டார்க் கூறியுள்ளார்.

