பாடாங் செராயில் பக்கத்தான் வழிவிட்டு தேசிய முன்னணி விலகுகிறது

பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பானுக்கு வழிவிட்டு தேசிய முன்னணி விலகி கொண்டிருப்பதாக பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.

பாடாங் செராயில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் டாக்டர் சோபி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் ம இகா வேட்பாளர் டத்தோ சிவராஜ் போட்டியிடுகிறார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் தேசிய முன்னணி இடம் பெற்றிருப்பதால் பாடாங் செராய் தொகுதியில் இருந்து தேசிய முன்னணி விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

பகாங் மாநிலத்தில் திமோமான் சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணிக்கு வழிவிட்டு பக்கத்தான் ஹரப்பான் விலகி கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles