
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்றது முதல் பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டிருப்பதால் வணிகர்கள் பூரிப்பு அடைந்துள்ளனர்.
நேற்றும் இன்றும் பங்கு சந்தைகள் 2.71 விழுக்காடு உயர்ந்துள்ளது.
அதேசமயம் மலேசியா ரிங்கிட் மதிப்பும் இன்று உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு அமெரிக்க டாலருக்கு 4 ரிங்கிட் 44 காசாக பதிவானது.
ஆனால் இன்று 4 வெள்ளி 40 காசு என்று பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

