
ஷா ஆலம், டிச 11-
ஈப்போவை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் மதியழகனின் எண்ணங்கள் வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 14 ஆம் தேதி கிள்ளான் எம்பிகே மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஷா ஆலம் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் தலைமை ஏற்கிறார் என்று ஏற்பாட்டுக் குழு தலைவர் சீரியநாதன் தெரிவித்தார்.

