சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு 38 லட்சம் வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார் டத்தோஸ்ரீ இரமணன்

கோலாலம்பூர் டிச 27-
2024 ஆம் ஆண்டு முடிவடையும் தறுவாயில் பல்வேறு முயற்சிகளை வெற்றியடையச் செய்ய ஒத்துழைத்த சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இரமணன் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத்திற்கு RM3.8 மில்லியன் அதாவது 38 லட்சம் வெள்ளி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

  • மக்கள் நட்பு திட்டம்,
    சமூகத்தின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நலன் சார்ந்த அம்சங்கள், குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைக்கவும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் RM357,834 ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பேரிடர் நிவாரணம்
  • வெள்ளம் மற்றும் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM263,550 விநியோகிக்கப்பட்டது.

உதவி தேவைப்படும் மக்களுக்கு உணவு பொருட்கள், உளவியல் ஆதரவு மற்றும் குடியிருப்பு புனரமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

  • கல்வி
    புதுமையான பாடத்திட்டத்தின் அறிமுகம், தொழில்முறை ஆசிரியர் பயிற்சி மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றலில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு போன்ற கல்வித் திட்டங்களுக்கு – RM107,390 பயன்படுத்தப்பட்டது.
  • சமூக நிகழ்ச்சிகள்
  • 180 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு RM957,637 வழங்கப்பட்டது.

வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளவும் இது பயன்பட்டது.

  • வழிபாட்டு இல்லம், மசூதிகள், சூராக்கள், கோவில்கள், மற்றும் தேவாலயங்களுக்குRM140,509 நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஆதரவுக்கும் நன்றி. நாம் தொடர்ந்து ஒன்றாக முன்னேறுவோம்! என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles