இந்தியா தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது – மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடில்லி டிச 27-
உடல் நல குறைவால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார்

அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர

அந்த வகையில் இந்திய பிரதமர்
நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது.

அவர் எளிமையான இடத்தில் இருந்து மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார்.

நிதி மந்திரி உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றிய அவர், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார்.

பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன.

நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles