பயணிகள் வேடத்தில் ஜே.பி.ஜே. அதிகாரிகள்- பேருந்து ஓட்டுநர்கள் கவனமுடன் செயல்பட உதவும்

புக்கிட் மெர்தாஜம், ஜன. 24 – பயணிகள் வேடத்தில் விரைவு பேருந்துகளில்
பயணிக்கும் சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அமலாக்க
அதிகாரிகளின் செயல் பேருந்து ஓட்டுநர்கள் கவனமுடன் வாகனத்தைச்
செலுத்துவதை உறுதி செய்வதில் பெரிதும் துணை புரிகிறது.

தாங்கள் கவனிக்கப்படுவதை பேருந்து ஓட்டுநர்கள் உணரும் காரணத்தால்
அவர்கள் கவனமுடன் செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதோடு
குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக உடனடியாகவும் நடவடிக்கை
எடுக்கப்படுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்துகிறது என்று பினாங்கு
மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் ஜூல்கிப்ளி இஸ்மாயில் கூறினார்.

பயணிகள் வேடத்தில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையின்
போது வாகனமோட்டும் லைசென்ஸ், பி.எஸ்.வி. லைசென்ஸ் மற்றும்
பேருந்தை செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்துவது போன்ற
குற்றங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

இவை தவிர, வாகனமோட்டும் போது புகைபிடிப்பது, இரட்டைக்
கோடுகளில் முந்திச் செல்வது உள்ளிட்ட குற்றங்களும்
கண்காணிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles