
மங்கோலியா மாடல் அழகி அல்தான்தூயா கடந்த 2006ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்து மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டார்.
அல்தான்தூயாவின் தந்தை ஷரிபுவ் செட்டேவ் , தாய் அல்டன்செசெக் சஞ்சா, சகோதரர் ஆகியோர், பத்து கோடி வெள்ளி இழப்பீட்டை கோரி வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில்
அல்தாந்துயா ஷாரிபுவின் குடும்பத்திற்கு, 50 லட்சம் வெள்ளியை வழங்க, சிலாங்கூர், ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதிபதி வசீர் ஆலம் மைடின் மீரா தீர்ப்பு வழங்கினார்.
அல்தான்தூயா கொலை வழக்கில் போலீஸ்காரர்களான அசிலா ஹத்ரி, சிரூல் அசார் உமர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

