மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகி ராஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகல்!

 சென்னை: பாஜகவின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ராஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகவிலகினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.

தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது.

என்னைப் பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

v

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles