2025-2035 உயர்க்கல்வி  திட்ட வரைவு அங்கீகாரத்திற்கு தயார்: மலேசிய உயர்க்கல்வி அமைச்சு தகவல்

2025-2035 உயர்க்கல்வி திட்ட வரைவு அங்கீகாரத்திற்குத் தயாராக உள்ளதாக மலேசிய உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது 

இந்த உயர்க்கல்வி திட்ட வரைவைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சு சொன்னது 

வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையின்றி இந்த திட்ட வரைவு மலேசியா அதன் உயர்க்கல்வி அம்சங்களை முன்னிருத்தி பெருந்திட்டம் அமையப்பெற்றது 

இந்த திட்ட வரைவானது அஸ்மா இஸ்மாயில் அகாடெமிக் வல்லுநர்கள் மேற்கொண்டதாகவும் கிட்டத்தட்ட 240 ஆராய்ச்சி, 100 மேற்கோள், வழிகாட்டி கல்வி தொகுப்புகளும் பங்களிக்கப்பட்டதாக அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக சொன்னது 

முன்னதாக, உயர்க்கல்வி அமைச்சுக்கான புதிய 2025-2035 உயர்க்கல்வி திட்ட வரைவு முன்னெடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் கடீர் கூறினார் என்பது குறிப்பிடட்த்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles