
பொது மருத்துவர்களுக்கான கட்டணத்தில் மாற்றம் கொண்டு வர அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சர் சூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.
இதுகுறித்து வரும் மே மாதத்துக்குள் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்
மலேசியாவின் வாழ்க்கைச் செலவின தேசிய செயல் மன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பொது மருத்துவர்களை நாடுவதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நாங்கள் அரசாங்க அமைப்புகளுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.

