98 நாட்கள் மகப்பேறு விடுப்பு, ஜனவரி 1 முதல் வாரத்தில் 45 மணிநேரம் வேலை! மனித வள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

1955 ஆம் ஆண்டு வேலைச் சட்டத் திருத்தத்தின் அமலாக்கம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தொடரும்.

இந்தச் சட்டத்திற்கு ஏற்கெனவே நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதால், இந்தச் சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வி சிவக்குமார் தெரிவித்தார்.

மகப்பேறு விடுப்பை 60 நாட்களில் இருந்து 98 நாட்களாக உயர்த்துதல், ஏழு நாட்கள் மகப்பேறு விடுப்பை நிறுவுதல், வாராந்திர வேலை நேரத்தை 48 மணி நேரத்திலிருந்து 45 மணி நேரமாகக் குறைத்தல் மற்றும் ஊழியர்களுக்கான நெகிழ்வான பணி ஏற்பாடுகள் ஆகியவை அடுத்த ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வருகிறது என்றார்.

இதனிடையே சில துறைகள் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருப்பதை மனித வள கடுமையாக கருதுகிறது.

உள்துறை அமைச்சுடன் இணைந்து மிக விரைவில் போதுமான தொழிலாளர் இருப்பதை அமைச்சு உறுதி செய்யும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றி பேசப்பட்ட வேளையில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles