
ஈப்போ, ஏப்.4: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 6 ல், காலை மணி 8.00 க்கு மகாவிஷ்ணுவின் பரம்பொருள் யாகம் நிகழ்வு ” திரவல் லோன்ச்” தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவிப்பு செய்துள்ளனர்.
தமிழகத்தில் பரம்பொருள் அறக்கட்டளையை நிறுவி பல ஆன்மீக மற்றும் சமூகப்பணிகளை ஆற்றி வரும் குருஜி மகாவிஷ்ணு, உலகின் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஆன்மீகப் பயிற்சி அளிப்பதோடு ஆன்மீக உரைகளும் ஆற்றி வருகிறார். அவரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு தொடர்புக்கொள்ள வேண்டிய எண்: 011-26811028. இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

