பூச்சோங் வட்டார இந்தியர்களுக்கு MiSI ஏற்பாட்டில் “3D பிரிண்டிங் மற்றும் லேசர் வேலைப்பாடுகளில் மேம்பட்ட Ai” திட்டம்!

பூச்சோங், ஏப் 21-

மலேசிய இந்திய திறன் முன்னெடுப்பாடு எனும்   (MiSI)யின் ஏற்பாட்டில் பூச்சோங் வட்டார இந்தியர்களுக்கு மேம்பட்ட Ai இன் 3D பிரிண்டிங் மற்றும் லேசர் வேலைப்பாடு திட்டம் அதிகாரப்பூர்வமாக நேற்று பூச்சோங்கில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் பங்கேற்பாளர்களை சமீபத்திய தொழில்நுட்ப திறன்களுடன் சித்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் அடிப்படையிலான நவீன பொருளாதாரத்தில் அவர்களின் ஈடுபாட்டையும் மற்றும் போட்டித்தன்மையையும் அதிகரிக்கச் செய்யும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யீன் தெரிவித்தார்.

சமூகத்திற்கு உயர் மதிப்புள்ள திறன் பயிற்சியை வழங்குவதில் MiSI-இன்  அர்ப்பணிப்புக்கு தனது  பாராட்டுகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.

MiSI-இன் இந்த அணுகுமுறையானது தனிநபர்களை  நிலையான வளர்ச்சிக்கு தூண்டுவதோடு அவர்களின் தன்னம்பிக்கையை வலுபடுத்தவும் வழிவகுக்கிறது.

இந்த முக்கியமான முயற்சியைத் தொடங்குவதில் தலைமைத்துவம் மற்றும் ஆதரவளித்ததற்காக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிற்கும் தாம் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் இயோ பீ யீன்.

மலேசியர்களின் ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்த, நாடு முழுவதும் இதுபோன்ற முயற்சிகளுக்கு இந்தத் திட்டம் ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் அவர்  நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் பங்கேற்ற  பங்கேற்பாளர்கள் அனைவருக்கும்  வாழ்த்துக்களையும் மேலும் அவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles