கலாச்சார உணர்வு – சமூக அரவணைப்புடன் நடைபெற்ற பிறை சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்!

பிறை ஏப்ரல் 21-
சித்திக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

கலாச்சார உணர்வு மற்றும் சமூக அரவணைப்புடன் சித்திரை புத்தாண்டைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவை பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிறை எம்பிபிகே குழுவினரால் இலவச உணவு கூடம் அமைக்கப்பட்டு அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 100 பேருக்கு சுவையான உணவு வழங்கப்பட்டது.

சாம்பாருடன் சூடான தோசை சுவையான ரொட்டி ஹல்வா மற்றும் ஆரோக்கியமான
பாசி பருப்பு உணவும் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வு ஒற்றுமை, கலாச்சாரம் மற்றும் மகிழ்ச்சியின் அழகான பிரதிபலிப்பாக இருந்தது என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

பாரம்பரிய உணவுகளையும் பண்டிகை உற்சாகத்தையும் அனுபவிக்க அதிக அளவில் மக்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடியது பார்ப்பதற்கு உண்மையிலேயே மனதைத் தொட்டது.

தன்னார்வலர்கள், ஏற்பாட்டுக் குழு மற்றும் இந்த அர்த்தமுள்ள கொண்டாட்டத்தை ஆதரித்த அனைவருக்கும் மிக்க நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

பிறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ சிறப்பு வருகை தந்து சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து வாழ்த்தினார்.

நமது கலாச்சாரத்தின் உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்போம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles