ஆயர் கூனிங்கில் பவானிக்கு ஆதரவாக பிரச்சாரம்!

தாப்பா ஏப்ரல் 21-
தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களுக்கு மத்தியில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் பவானி போட்டியிடுகிறார்.

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும் வேளையில் இப்போது பவானிக்கு ஆதரவாக உரிமை கட்சியின் தலைவர் டாக்டர் இராமசாமி உட்பட பலரும் களம் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது தவிர்த்து பவானி இந்த இடைத்தேர்தலில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் அவருக்கு ஆதரவாக சமூக வலைத் தளத்திலும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles