

உலக அமைதியை வேண்டி 106 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் தனிநபராக துணிகர பயணத்தை இந்திய இளைஞர் கதிரவன் மேற்கொண்டுள்ளார்.
இன்று பத்துமலை திடலில் இருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்ட கதிரவனை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் மற்றும் துணை பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ ரமேஷ் ராவ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
கதிரவனுடன் மோட்டார் சைக்கிளில் பிரபாகரனும் சில மைல் தூரம் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிரவனுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் அணிவகுத்து சென்று ஆதரவு வழங்கினர்

