
கோலாலம்பூர் மே 27-
பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க கெஅடிலான் புதிய உச்சமன்றம் கூடுகிறது என்று
சிலாங்கூர் மந்திரி புசாரும் கட்சியின் உதவித் தலைவருமான டத்தோஶ்ரீ அமிரூடின் கூறினார்.
கடந்த வாரத் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கவும் கட்சி அலுவலக நியமனங்கள் குறித்து முடிவுகளை எடுக்கவும் இந்த உச்சமன்றம் கூடவுள்ளது,
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நூருல் இஸாவிடம் தோல்வியடைந்தார் .
ரபிஸி ரம்லியின் நியமனம் குறித்த விவாதம் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இருப்பதாக அவர் சொன்னார்.
கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் உறுதியளித்ததால், அவர் இன்னும் கட்சிக்கு பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.
அவர் இன்னும் ஒரு உறுப்பினராக பங்களிக்க விரும்புகிறார் என்று அவர் கூறினார்.

