
இந்தோனேசியாவுடன் நெருங்கிய நட்பின் காரணமாக பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு தனது முதல் பயணத்தை இந்தோனேசியாவை தேர்ந்தெடுத்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஒருமுறை அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட்டபோது இந்தோனேசியா வழங்கிய சிகிச்சையை என்னால் மறக்க முடியாது.
இந்தோனேசியா நெருங்கிய அண்டை நாடு. நல்ல நட்பு.
நான் தூக்கி எறியப்பட்டு, ஒதுக்கப்பட்ட பின்னரும் உண்மையான நண்பனாக இந்தோனேசியா ஏற்றுக் கொண்டது என்று ஜகார்த்தாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும் போது டத்தோஸ்ரீ அன்வார் மிக உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

