
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை பொங்கல் திருநாள்.
உழவு தொழிலில் அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து அதில் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கும் இந்த திருநாள் தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று.
வயல்களில் மகத்தான விளைச்சலுக்கு உதவிய சூரியன், இயற்கை அன்னை மற்றும் அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல்.
தமிழ் மாதமான தை முதல்நாள் கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கல் அனைவரின் இல்லங்களிலும் பெரும் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் தமது தைப்பொங்கல் வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

