அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பிறை கிராமத் தலைவர்கள் முக்கிய சந்திப்பு!

பிறை, ஜூலை 24-
பிறை சட்டமன்ற தொகுதியில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பிறை எம்பிபிகே தலைவர்களின் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கவுன்சிலர் பொன்னுத்துரை விக்டர், பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தற்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் சமூக மட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்கவும் சேதமடைந்த வடிகால்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர் நடவடிக்கைக்காக பழுது பார்க்க வேண்டிய சாலைகள் தரவுகளை சேகரிக்குமாறு அனைத்துத் தலைவர்கள், செயலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அடுத்த மாதம் கோத்தோங் -ரோயோங் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் சமூக தொடர்புத் திட்டத்தைத் திட்டமிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு, பினாங்கு இளைஞர் குழுவுடன் (JBPP) மாதாந்திர சந்திப்பு இடம் பெற்றது. பிறை பகுதியில் உள்ள இளைஞர்களை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் பல நன்மை பயக்கும் திட்டங்களைப் பற்றி விவாதிக்க இந்த கூட்டம் சிறப்பாக அமைந்தது.

பிறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு அவர்கள் பிறை பகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியும் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

ஆக அடிமட்டத்தில் நாம் எடுக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் செயலிலும் இந்த முக்கியத்துவம் ஒரு முக்கியமான வழிகாட்டியாகும் என்று கவுன்சிலர் பொன்னுத்துரை மற்றும் ஸ்ரீ சங்கர் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles