சுக்மா போட்டியில் சிலம்பப்போட்டியை நீக்கியது நியாயமற்றது – மலேசிய டாக்டர் எம். ஜி. ஆர். கொள்கை இயக்கம்

மலேசியாவில் நடைபெறவுள்ள சுக்மா (SUKMA) விளையாட்டு விழாவில், பாரம்பரிய தமிழர் கலை இலக்கியம் மற்றும் வீர விளையாட்டாக விளங்கும் சிலம்பப்போட்டியை நீக்கியது, மிகுந்த அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது என மலேசிய டாக்டர் எம்.ஜி.ஆர் கொள்கை இயக்கத்தின் துணைத்தலைவரும் , மலேசிய முத்தமிழ் சங்க அயல. தொடர்புத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் டத்தோ டாக்டர் முத்து இரத்தினம் தெரிவித்துள்ளார்.

சிலம்பம் என்பது தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய வீரக் கலை. இது சதுரவீத தத்துவத்தையும், உடல்தகுதியையும், தற்காப்புத் திறமையையும் வளர்க்கும் ஒரு கலையாகவும், சின்ன வயதிலிருந்தே மாணவர்களுக்கு ஒழுக்கமும், ஒழுங்கும் பயிற்றுவிக்கும் ஒரு வழிமுறையாகவும் விளங்குகிறது. உலகளவில் தற்போது சிலம்பம் விரிவாகப் பரவிவருகிறது. மலேசியாவிலும் இக்கலைக்கு மிகுந்த வரவேற்பும், வளர்ச்சியும் காணப்படுகிறது.

இந்நிலையில், தேசிய மட்டத்தில் நடைபெறும் சுக்மா போட்டியில் சிலம்பத்தை ஒரு விளையாட்டு விருப்பமாக இருந்து நீக்குவது, தமிழர் பாரம்பரியத்தையும், வீர விளையாட்டு கலைகளையும் புறக்கணிப்பதற்கே சமம். இந்நடவடிக்கை உண்மையில் நியாயமற்றது, மேலும் பல இளைஞர்களின் உற்சாகத்தையும், உறுதிமனப்பான்மையையும் குறைக்கும் ஒன்றாகும்.

எனவே, மலேசிய டாக்டர் எம்.ஜி.ஆர். கொள்கை இயக்கம், சுக்மா போட்டி ஒழுங்கமைப்பாளர்களிடம் –
• சிலம்பத்தை மீண்டும் போட்டித் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்றும்,
• பாரம்பரிய விளையாட்டுகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

இது ஒன்றும் தமிழ் சமூகத்தின் சுய மரியாதை மட்டுமல்ல, மலேசியா போன்ற பன்முக கலாசார நாடுகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் தங்கள் பாரம்பரியத்தை பேணும் உரிமை உள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

முற்றிலும், இக்கோரிக்கை ஒரு சமூகத்தின் உணர்வை பிரதிபலிக்கின்றது. அதனால் இது கடுமையாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles