
ஈப்போ, ஆக.12: மலேசியத் தமிழர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பேராசிரியர் டான்ஸ்ரீ டத்தோ மு. தம்பிராஜா அண்மையில் தமது 83ஆம் அகவையில் காலமானார்.
அதனையொட்டி எதிர்வரும் 16.8.2025( சனிக்கிழமை), மாலை மணி 4.30க்கு ஈப்போ ஸ்ரீ முருகன் நிலைய ஆசிரமத்தில் இரங்கல் கூட்டமொன்று ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநருமான முனைவர் சேகர் நாராயணன் கூறினார்.
எனவே, முன்னாள் மாணவர்களும் பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

