

கோலாலம்பூர் ஆக 23-
நாட்டின் 68 ஆவது மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு தற்போது நாடு முழுவதும் தேசியக் கொடிகளை பறக்கவிடும் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று பங்சார் எல்ஆர்டி முனையத்தில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் கலந்து கொண்டார்.
முன்னதாக உறுமி மேளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

