
சிரம்பான்,செப் 3-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப் பள்ளியில் திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கு YTL நிறுவனம் 4 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளது.
385 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு கடந்த 2 ஆண்டுகளாக திறந்த வெளி மண்டபம் கட்ட வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு வந்தது.
போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் முயற்சியில் YTL நிறுவனத்திடமிருந்து RM 450,000.00 பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் நெகிரி செம்பிலான் மாநில முதல்வரிடமிருந்து RM 30,000.00 வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட வேண்டும்.
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் பல நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், குறிப்பிட்ட கால கட்டத்தில் அனைத்து விண்ணப்பத்தையும் ஈடுகட்ட வேண்டும் என்றால் சுலபம் இல்லை.
ஆகவே, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நிதியுதவி மூலம் தமிழ்ப்பள்ளிகளின் நிலமையை மாற்றியமைத்து மாணவர்களுக்கு ஒரு சூழ்நிலையை ஏற்ப்படுத்தி தர முடியும்

